Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆரோக்கியம்

காய்ச்சல் அடிக்கும் போது இந்த உணவுகளை மறந்தும் சாப்பிடவே கூடாதாம்...

காய்ச்சல் அடிக்கும் போது இந்த உணவுகளை மறந்தும் சாப்பிடவே கூடாதாம்...

தற்போதைய மாறுபட்ட வானிலையால் வெயிலும், மழையும் மாறி மாறி வருகிறது. இதனால், நோய்களின் அபாயமும் வேகமாக அதிகரிக்கிறது. இதன் காரணமாக, நாம் அனைவரும் நமது ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கோடை மற்றும் மழைக்காலம் வரும் போதெல்லாம், ஒரு குறிப்பிட்ட வகையான காய்ச்சல் அதிகமாக பரவுகிறது. உண்மையில், வெப்பம் மற்றும் மழையில் (அதாவது மார்ச் முதல் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில்), வெப்பமும், குளிர்ச்சியும் கலந்து மாறுபட்ட தட்பவெட்ப சூழலில் வீசக்கூடிய காற்று பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அத்தகைய காற்றை சுவாசிப்பதன் மூலம் தொண்டை மற்றும் மூக்கினுள் செல்லும் போது அதனால் காய்ச்சல் மற்றும் ஒவ்வாமை ஏற்படுகிறது. கண்ணில் அரிப்பு, மூக்கில் நீர் வடிதல், சைனஸ், கருவளையம், சோர்வு, சளி, இருமல், காய்ச்சல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இதனால் ஏறபடக்கூடிய காய்ச்சலில், ஒருவர் சில பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், நிலைமை இன்னும் மோசமாகிவிடும். இப்போது இந்த கட்டுரையில் காய்ச்சலின் போது எந்தெந்த உணவுகளை சாப்பிட கூடாது என்பதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்…

சீஸ்

ஹிஸ்டமைன் ரசாயனம் சீஸ் எனும் பாலாடைக்கட்டியில் காணப்படுகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தால் ஒவ்வாமைக்கு ஆளாகும்போது உடலில் வெளியிடப்படுகிறது. உண்மையில், ஹிஸ்டமைன் உடலில் வீக்கம் மற்றும் குளிர்ச்சியை ஏற்படுத்தும். சீஸ் உடன் பல உணவுகளிலும் ஹிஸ்டமைன் காணப்படுகிறது. இதன் காரணமாக, காய்ச்சல் அடிக்கும் வேளையில் அத்தகைய உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும். தேவைப்பட்டால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஆண்டிஹிஸ்டமைன் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளலாம். இது அதன் செயல்திறனைக் குறைத்திடும்.

பால் பொருட்கள்

பெரும்பாலான பால் பொருட்களின் வகைகள் உடலில் சளியை அதிகரிக்க செய்கின்றன. இதன் காரணமாக, அவை எந்த ஒவ்வாமையையும் மேலும் அதிகரிக்க செய்யலாம். உண்மையில், பால் பொருட்களான பாலாடைக்கட்டி மற்றும் பாலினால் செய்யப்பட்ட பொருட்களை தானியங்களுடன் சேர்த்து உட்கொண்டால் மூக்கில் உள்ள சளியை அதிகரிக்கிறது. இதன் காரணமாக, டீ குடிக்கிறீர்கள் என்றால் பசும்பாலுக்கு பதிலாக பாதாம் அல்லது ஓட்ஸ் பாலை சேர்க்கவும். இருப்பினும், இந்த நேரத்தில் தேங்காய் பாலை சாப்பிடவே கூடாது.

ஆல்கஹால்

ஆல்கஹாலில் உள்ள ஹிஸ்டமின்கள் காய்ச்சலின் போது கண்ணில் அரிப்பை அதிகரிக்கு மற்றும் வாசனை உணர்ச்சியைக் குறைக்கும். பீர், சைடர் மற்றும் ரெட் ஒயின் போன்ற பானங்களில் அதிக ஹிஸ்டமைன்கள் உள்ளன. அவை காய்ச்சலின் அறிகுறிகளை மேலும் அதிகரிக்கலாம். எனவே, காய்ச்சல் அடிக்கும் வேளைகளில் ஆல்கஹால் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

இனிப்புகள்

சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலில் ஹிஸ்டமைன் உற்பத்தியை ஏற்படுத்துகின்றன. அது காய்ச்சலின் அறிகுறிகளை மேலும் அதிகரிக்கும். இதன் காரணமாக, காய்ச்சல் அதிகமாக இருக்கும் போது இனிப்பு வகைகள் சாப்பிடுவதை குறைத்து கொள்ளலாம் அல்லது அதை நிறுத்திடலாம்.

சிட்ரஸ் பழங்கள்

காய்ச்சல் அதிகமாக உள்ளவர்களுக்கு செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் உணவு ஒவ்வாமைகளும் இயல்பாகவே ஏற்படக்கூடும். உண்மையில், ஒவ்வாமை காரணமாக, தொண்டையில் அரிப்பு, காதுகளில் அரிப்பு, பழங்களை சாப்பிட்ட பிறகு நாக்கு அல்லது உதடுகளில் வீக்கம் ஏற்படலாம். இதன் காரணமாக, சில அமிலங்கள் அல்லது சிட்ரஸ் பழங்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்! வாசிக்க →